|
திருத்தொண்டர் புராணத்தில் சேக்கிழார், அடியவர் அறுபத்துமூவரின் அவதாரத் தலங்களை பூகோள ரேகையாகக் காட்டியுள்ளார். அந்த ரேகையைப் பற்றுக்கோடாகப் பிடித்துக் கொண்டு பெரியோராம் அறுபத்து மூவரின் பிறப்பிடங்களைக் கண்டறிந்தோம். ஆலயமுள்ள அடியவர்கள், ஆலயமற்ற அடியவர்களும் பட்டியலிட்டு இணைத்துள்ளோம்.
பின்பு ஒவ்வொரு நாயன்மாருக்கும் ஆலயம் அமைக்கும் திருப்பணி துவங்கியது. இப்பெரும் பயணத்தில் திருவருளால், குருவருளால், ஆன்றோரின் ஆசியால் மூன்று நாயன்மார்களுக்குத் திருப்பணிகள் நிறைந்து குடமுழுக்கு இனிதே நிறைவுற்றது.
|